குளச்சல் நகராட்சி அவசர கூட்டம் நகர்மன்ற தலைவர் நசீர் தலைமையில் நடந்தது. ஆணையாளர் ராஜமாணிக்கம், மேலாளர் பிரேமா, சுகாதார ஆய்வாளர் ராமசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த அவசர கூட்டத்தில் சுயேட்சை நகர்மன்ற உறுப்பினர் அன்வர்சாதத் கூறும் போது தமிழக அரசு கொண்டு வந்த வீட்டுவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த மன்றத்திற்க்கு வராமல் புறக்கணித்த திமுகவின் 10 நகர்மன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் இந்த வரி உயர்வானது கொரோனா காலகட்டத்தில் வருவாயை இழந்த மக்களுக்கு கூடுதல் சுமையை தான் இந்த திமுக அரசு வழங்குகிறது. ஆகையால் இந்த கூடுதல் வரியை ரத்து செய்யவோ அல்லது 10சதவித வரி உயர்வை செய்து தீர்மானம் நிறைவேற்ற நகர்மன்றத்தில் 17வது வார்டு உறுப்பினர் அன்வர்சாதத் கேட்டு கொண்டார்.
More like this

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...
அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...





