Saturday, September 13, 2025

நடுகடலில் தத்தளித்த இலங்கை மீனவர்கள் – அதிரை கடற்கரையில் மீட்கப்பட்டனர்-

spot_imgspot_imgspot_imgspot_img

இலங்கை முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த மீனவர்கள் அதிராம்பட்டினம் கடற்பகுதியில் தத்தளித்து வருவதாக அதிராம்பட்டினம் கடலோர காவல் படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து விரைந்து சென்ற காவல்துறையினர் கடலில் தத்தளித்த மீனவர்களை பத்திரமாக மீட்டனர்.

இயந்திரம் பொருத்தப்பட்ட பைபர் படகில், மன்னார் பேச்சாளை-உதயபுரம் நடராஜன் மகன் சுதாகர் (26), முல்லைத்தீவு சிலாவெட்டு பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் ரோசன் (30) இருவரும், கடலுக்குள் மீன் பிடிக்க சென்றதாகவும் போதிய எரி பொருள் இன்மையால்  படகின் இயந்திரம் பழுதாகி நின்றதாக கூறப்படுகிறது.

இதனால் பாய்மரத்தை  பயன்படுத்தி காற்றின் திசை நோக்கி கரையேற முயற்ச்சித்ததாக அவர்கள் இருவரும் தெரிவித்தனர். 

கடலோர பாதுகாப்பு  காவல்துறையினர் படகைக் கைப்பற்றி, இரண்டு மீனவர்களையும் அதிராம்பட்டினம் கடலோர காவல் படை அலுவலகத்திற்கு அழைத்து  விசாரித்து வருகின்றனர்.

இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்னிலையால் இலங்கை மக்கள் தமிழகத்தை நோக்கி இடம்பெயர்ந்து வரும் சூழலில் இவர்கள் கூறும் தகவல்கள் உண்மையானவையா அல்லது வேறு காரணங்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக கடலோர பாதுகாப்புக் குழும டிஎஸ்பி சுப்ரமணியன், இன்ஸ்பெக்டர் மஞ்சுளா, சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், நுண்ணறிவு பிரிவு தலைமைக் காவலர் வெற்றிச்செல்வன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : AFFA அணியின் வேகத்தில்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கால்பந்து தொடர்களில் தலைசிறந்து விளங்கும்...

தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : ஆலத்தூரை சாய்த்து, வெற்றிக்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி கடந்த 20.06.2025 வெள்ளிக்கிழமை AFWA வின் மைதான திறப்பு...

வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்கள் எந்த உத்தரவும்...

வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991க்கு எதிராக தொடரப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று...
spot_imgspot_imgspot_imgspot_img