அதிரை நடுத்தெரு, காலியார் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு ஒரே மின் மாற்றியிலிருந்தே மின் விநியோகம் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி மின் அழுத்தம் போன்ற பிரச்சனைகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளி அருகே புதிதாக மின் மாற்றியை மின்வாரிய ஊழியர்கள் அமைத்தனர். இந்த பணியை 11வது வார்டு கவுன்சிலர் இஸ்மாயில் நாச்சியா NKS சரீப் அவ்வப்போது பார்வையிட்டு பணியை விரைவு படுத்த அறிவுறுத்தினார். இந்நிலையில், அந்த மின் மாற்றி நேற்று முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் நகராட்சி மன்ற துணை தலைவர் இராம.குணசேகரன், எம்.எம்.எஸ்.அப்துல் கரீம், NKS சரீப், சுஹைப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...





