பட்டுக்கோட்டை தாலுகாவிலிருந்து வருவாய் கிராமங்களை பிரித்து புதிதாக அதிராம்பட்டினம் தாலுகா உருவாக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக ஏரிப்புறக்கரை வருவாய் கிராமத்தை அதிராம்பட்டினம் தாலுகாவுடன் இணைக்க இசைவு தெரிவித்து ஊராட்சி மன்ற தலைவர், உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் கடிதத்தில் கையொப்பமிட்டு அதிகாரிகளிடம் வழங்கினர். இதேபோல் பிற வருவாய் கிராமங்களில் வசிக்கும் மக்களிடமும் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. கடலோர மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் விரைவாக கிடைத்திடவும், புயல் போன்ற பேரிடர் காலத்தில் மீட்பு மற்றும் புனரமைப்பு பணியை துரிதமாக மேற்கொள்ளவும் அதிராம்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கி ஆக வேண்டியது காலத்தின் கட்டாயம்.
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





