Monday, December 15, 2025

ஆனைவிழுந்தான் குளக்கரையில் பசுமை புரட்சி !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் 13வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான ஆனை விழுந்தான் குளக்கரையில் பொருப்பற்ற சில பொதுமக்களால் குப்பைகளை கொட்டி நாசம்.செய்யப்பட்டு வந்தன.

இதனால் அப்பகுதியே துர்நாற்றம் வீசி சுற்று சூழலுக்கு சவால் விட்டு கொண்டிருந்தது.

நீர்நிலைகளை பாதுகாக்க அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

அதன் படி பழமைவாய்ந்த இந்த நீர்நிலைகளை தூய்மையாக பாதுகாக்க பல்வேறு தரப்பும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நிலைமை இவ்வாறு இருக்க அதிராம்பட்டினம் நகராட்சி குப்பை கொட்டும் கிடங்கு நிரம்பி வழியும் இத்தருனத்தில் ஆனை விழுந்தான் குள குப்பைகளை அகற்ற
அப்பகுதி மக்கள் கவுன்சிலரான பெனாசிரா அஜாருதீனுக்கு கோரிக்கை விடுத்தனர்.

கோரிக்கை குறித்து நகராட்சி நிர்வாகத்தின் பார்வைக்கு கொண்டு சென்ற பெனாசிரா அஜாருதீன் தமது வார்டுக்குட்பட்ட ஆனை விழுந்தான் குளத்து மேட்டில் கொட்டப்பட்ட குப்பைகளை உடனடியாக அகற்ற அதிகாரிகளை கேட்டு கொண்டார்.

இந்த குப்பையை அள்ளி எங்கே கொட்டுவது என கையை பிசைந்த நகராட்சி துணை தலைவர் JCB இயந்திரத்தை வரவழைத்து லாவகமாக குளத்தில் குப்பைகளை தள்ளி குளக்கரையை சுத்தப்படுத்தியுள்ளார்.

நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டிய நகராட்சி நிர்வாகமே நீர் நிலைகளை அழிக்க முயர்சித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சம்மந்தப்பட்ட இடத்தில் இனியும் குப்பை கொட்ட கூடாது என மாற்றி யோசித்த SDPI கட்சியின் கவுன்சிலர் அப்பகுதியை பசுமை வழியாக மாற்றியமைக்க திட்டமிட்டிருக்கிறார்.

அதன் முதல்படியாக குளத்தை சுற்றிலும் பூமர செடிகளை வைத்து பராமரிப்பது என்றும், தானியங்கி கண்காணிப்பு கேமரா பொருத்தி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க போதுமான நடவடிக்கைகளை நகராட்சி உதவியுடன் செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!

அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...

மல்லிப்பட்டினத்தில் சாலை விபத்து,சம்பவ இடத்திலேயே இருவர் பலி.

மல்லிபட்டினம், டிசம்பர் 14: இன்று மாலை பெட்ரோல் பங்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களும் அதிவேகமாக இரு சக்கர...
spot_imgspot_imgspot_imgspot_img