Sunday, February 1, 2026

அதிரை ததஜவின் போதை ஒழிப்பு பேரணி – ஏராளமானோர கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் ஒன்றாம் கிளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட போதை எதிர்ப்பு பேரணியை மாவட்ட தலைவர் ராஜிக் அகமது துவக்கி வைத்தார்.

தக்வா பள்ளிவாசல் அருகில் இருந்து துவங்கிய இப்பேரணி பேருந்துநிலையம் வரை நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் ஹாஜா ஜியாவுதீன்,மாவட்ட பொருளாளர் அப்துல்ஹமீது,மாவட்ட துணைதலைவர் வல்லம் ஜாபர், மாவட்ட துணைச் செயலாளர்கள் வல்லம் அப்துல்லா, ஆவணம் ரியாஸ் ,எம்.அஷ்ரப் அலி, இத்ரிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாநிலப் பேச்சாளர் பா.அப்துர்ரஹ்மான் சிறப்புரையாற்றினார். கிளைத்தலைவர் நவாப்ஷா நன்றி உரையாற்றினார்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் கிளை 1 சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடந்து கொண்டிருக்கிற போதை எதிர்ப்பு பேரணி கூட்டத்தின் சார்பாக கஞ்சா போன்ற போதை பொருட்கள் புழக்கத்தை தீவிரமாகக் கண்காணித்து ,அதை முற்றிலும் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளுவதோடு,அதற்கு துணையாய் இருக்கின்ற அரசு அதிகாரிகளை நிரந்தர பணிநீக்கம் செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!(படங்கள்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வர இருக்கும் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை...

வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்பாட்டம்!

ஒன்றிய அரசின் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024-ஐ திரும்பப்பெற வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நேற்று (ஆக.17) சென்னை மாவட்ட ஆட்சியர்...
spot_imgspot_imgspot_imgspot_img