Saturday, September 13, 2025

தொடங்கியது பருவமழை! பிலால் நகரில் வடிகால் தூர்வாரும் பணிகள் தீவிரம்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையை அடுத்த ஏரிப்புறக்கரை ஊராட்சி 1வது வார்டு கவுன்சிலர் ஜாஸ்மின் பானு கமாலுதீனின் தீவிர முயற்சியால் பிலால் நகர் ரயில்வே கேட் முதல் காலேஜ் முக்கம் வரையிலான வடிகால் வாய்க்காலை தூர்வாரும் பணிகள் நேற்று 02.11.2022 அன்று தமிழக அரசின் உள்ளாட்சி துறையால் துவங்கியதுடன் புதிய பாலத்திற்கான கோரிக்கையும் ஏற்கப்பட்டது.

வருடந்தோறும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பிலால் நகரின் துயரங்கள் குறித்து பல்வேறு உயர் அதிகாரிகள், முதலமைச்சரின் தனிப்பிரிவு போன்றவற்றிற்கு தொடர் கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டதை தொடர்ந்து இன்று உள்ளாட்சி துறையின் ஐ.ஏ.எஸ் ரேங்க் உயர் அதிகாரிகள், ஒன்றிய பெருந்தலைவர் பழனிவேலு, ஒன்றிய குழு உறுப்பினர் சுரேஷ், ஊராட்சி மன்ற தலைவர் சக்தி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரடியாக பிலால் நகரில் கள ஆய்வு செய்ததுடன் JCB இயந்திரம் மூலம் வாய்க்காலை தூர்வாரும் பணிகளை துவக்கி வைத்தனர்.

தூர்வாரும் பணிகள் நாளையும் தொடர்ந்து நடைபெறவுள்ளதுடன் செடியன்குளம் வாய்க்கால் ஆக்கிரமிப்பு பிரச்சனைகள் தொடர்பாகவும் தொடர் முயற்சிகளை கவுன்சிலர் மேற்கொண்டு வருகிறார்.

மேலும் கவுன்சிலர் ஜாஸ்மின் பானு கமாலுதீனின் கோரிக்கையை ஏற்று பிலால் நகருக்கு உயர்மட்ட பாலம் அமைத்துத் தருவதற்கான அளவீடுகளையும் உள்ளாட்சி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img