Saturday, September 13, 2025

அதிரை-பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டு வந்த எர்ணாகுளம்-வேளாங்கண்ணி ரயிலின் சேவை நீட்டிப்பு!

spot_imgspot_imgspot_imgspot_img

எர்ணாகுளம்-வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு விரைவு ரயில், கடந்த ஜூன் மாதம் முதல் திருவாரூர்-காரைக்குடி அகல ரயில் பாதையில் அதிராம்பட்டினம்-பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலின் மூலம் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, பேராவூரணி, முத்துபேட்டை, மதுக்கூர், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் பயணிகள் மிகவும் பயனடைந்து வந்தனர்.

இந்த நிலையில் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி(வண்டி எண் – 06035), வேளாங்கண்ணி-எர்ணாகுளம்(வண்டி எண் – 06036) வாராந்திர சிறப்பு ரயில் மேலும் இரண்டு மாதங்களுக்கு, அதாவது வருகிற ஜனவரி 1, 2023 வரை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சிறப்பு ரயிலாக இயங்கி வரும் இதனை, நிரந்தரமாக்க வேண்டும் என இப்பகுதி ரயில் பயணிகள் சங்கத்தினர், பயணிகள், வியாபாரிகள் என அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் மாதாந்திர மின்தடை அறிவிப்பு!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 21/05/2025...

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம்...

10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால்...

அதிரை அமமுக பிரமுகர் அபுபக்கர் குடும்பத்தாரின் மடல்!

அன்பார்ந்த SDPI,IUML அமைப்புகளுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் ….. SDPI, IUML, எங்கள் உறவினர் MB அபுபக்கர் அவர்கள் செய்த /செய்ய தூண்டியவர்கள் ) செயல்கள் மிகவும் மன...
spot_imgspot_imgspot_imgspot_img