Wednesday, March 18, 2026

அதிரை அரசு நிகழ்ச்சிக்கு யாருக்கும் தனிப்பட்ட அழைப்பு இல்லை! பொதுநலன் விரும்பிகள் தாமே பங்கேற்பு!!

spot_imgspot_imgspot_imgspot_img

நீர்வளத்துறையின் கீழ் பராமரிப்பில் உள்ள கல்லணை கால்வாயில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவியுடன் நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக பட்டுக்கோட்டை தாலுக்கா ராஜாமடம் கிளைகால்வாய், கிளைவாய்க்கால் மற்றும் ஏரிகளை புனரமைப்பு செய்வது குறித்து விவசாயிகள் மற்றும் மக்களின் கருத்துக்களை கேட்பதற்கான கூட்டம் அதிரை சம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் கடந்த நவம்பர் 19ம் தேதி நடைபெற்றது. பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் கீழ்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் முருகேசன் உள்ளிட்ட நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மேலும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஊராட்சி மன்ற பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில் அதிரை நகராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோர் பங்கேற்காதது பேசும் பொருளானது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளை அதிரை எக்ஸ்பிரஸ் தொடர்புக்கொண்டு பேசியது. அதற்கு பதிலளித்த அதிகாரிகள், யாருக்கும் தனிப்பட்டமுறையில் அழைப்புவிடுக்கவில்லை. மாறாக ஊடகங்கள் மூலம் கருத்து கேட்பு கூட்டம் குறித்து பொது அறிவிப்பு செய்தோம். அதனை பார்த்து பலர் கூட்டத்தில் பங்கேற்று தங்கள் கருத்துக்களை பதிவு செய்ததாக கூறினர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img