Sunday, February 1, 2026

அடடா..! அதிரை நகர்மன்ற தலைவராக இவர் வந்தால் எப்படி இருக்கும் : களத்தில் கலக்கும் 6வது வார்டு கவுன்சிலர்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை 6வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் கனீஸ் பாத்திமா காமில். வார்டில் மேற்கொள்ளப்படும் பணிகளை தனது கணவரின் மூலம் கண்காணித்து வருகிறார். அதன்படி தற்போது அந்த வார்டில் நடைபெற்று வரும் தார்சாலை பணியை முன்னின்று கவனித்து வரும் இவர், அரசு விதிகளின்படி பழைய சாலையை தோண்டி எடுத்துவிட்டு புதிய சாலையை அமைக்குமாறு ஒப்பந்ததாரரை வற்புறுத்தியுள்ளார்.

இதனால் அவ்வாறு எடுக்கப்பட்ட பழைய ஜல்லி கற்களை வாய்க்கால் தெரு பள்ளியில் நீர்தேங்க கூடிய இடங்களில் கொட்டி நிரப்பி அனைத்து வார்டு கவுன்சிலர்களுக்கும் முன்மாதிரியாக மாறியிருக்கிறார்.அதிரையில் எந்த கவுன்சிலரும் செய்ய துணியாததை துணிந்து செய்யும் கனீஸ் பாத்திமா காமில் எதிர்காலத்தில் அதிரை நகர்மன்ற தலைவரானால் எப்படி இருக்கும் என மக்கள் பேசிக்கொள்கிறார்கள். காரணம் மறைந்த திமுக முன்னோடியும் முன்னாள் கவுன்சிலருமான (கோழி) காதரின் மூன்றாவது மகன் தான் கவுன்சிலர் கனீஸ் பாத்திமாவின் கணவர் காமில்.

2011ம் ஆண்டு அதிரை பேரூராட்சி துணை தலைவர் தேர்தலில் போட்டியிட்ட காதர் எதிர்பாராத விதமாக வெற்றிவாய்ப்பை இழந்தார். இதனிடையே அவர் மரணமடைந்ததால் 2022ம் ஆண்டு நகராட்சி தேர்தலில் அவரது மருமகளுக்கு திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போதே கனீஸ் பாத்திமாவுக்கு துணை தலைவர் பதவி வழங்கப்படும் என பேசப்பட்ட சூழலில் இந்தமுறை அவருக்கான வாய்ப்பு கைநழுவி போனது.

முன்னதாக தலைமுறைகள் கடந்து திமுக சீனியர் பட்டியலில் முன்னாள் ஒன்றிய பொருளாளர் ஜெக்கரியாவின் பேரன் NKS.சரீப்பின் பெயர் தலைவர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...
spot_imgspot_imgspot_imgspot_img