Saturday, September 13, 2025

விதைப்போட்ட மமக! அதிரையில் வலுபெறும் ரயில் போராட்ட கூட்டமைப்பு!!

spot_imgspot_imgspot_imgspot_img

சென்னை தாம்பரம்-செங்கோட்டை அதிவிரைவு ரயில் அதிரையில் நின்று செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர். இந்நிலையில் ரயில் மறியல் குறித்து ஆலோசிக்க தோழமை கட்சிகளுக்கு அதிரை நகர மனிதநேய மக்கள் கட்சி அழைப்புவிடுத்தது. அக்கட்சியின் நகர அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஆர்.எம்.நெய்னா முகம்மது (நகர தலைவர், மமக), இணை ஒருங்கிணைப்பாளர் கோட்டூரார் ஹாஜா முகைதீன் (நகர செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகள் மற்றும் அனைத்து முஹல்லா நிர்வாகிகள் பங்கேற்று கருத்துக்களை முன்வைத்தனர்.

இதனையடுத்து அதிரையில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்த ஏதுவாக அனைத்து அரசியல் கட்சிகள், ஜமாத்தார்கள், கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள், வியாபார சங்கங்கள் என அனைவரையும் உள்ளடக்கி வலுவான கூட்டமைப்பை உருவாக்க முடிவு செய்து முதற்கட்டமாக அதற்கான குழுவையும் நியமித்தனர். இந்த குழு அனைத்து தரப்பையும் ஒருங்கிணைப்பதுடன் அடுத்தகட்ட முன்னெடுப்புகள் குறித்தும் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img