அதிரை வண்டிபேட்டை முதல் மெயின் ரோடு வரையில் சாலை விரிவாக்க பணிக்காக மின் கம்பங்கள் இடமாற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை தேவைப்படும் சமயத்தில் அவ்வபோது மின் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று காலை செய்யப்பட்ட மின் தடை அறிவிக்கப்பட்ட நேரத்தையும் கடந்து இரவு வரை நீண்டதால் வெகுந்தெழுந்த மக்கள், மின் ஊழியர்கள் பணி செய்துக்கொண்டிருந்த பழஞ்செட்டி தெரு பேருந்து நிறுத்தம் அருகே திரண்டனர். அப்போது அங்கு வந்த உதவி செயற்பொறியாளர் சர்மா, நிலமையை எடுத்துக்கூறி மக்களை சமாதானப்படுத்த முயற்சித்தார். மக்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு அவரால் தெளிவான பதில் அளிக்க முடியவில்லை. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தகவலறிந்து வந்த காவல்துறையினர், சாலை மறியலில் ஈடுபட முயன்ற மக்களை சமரசம் செய்து மறியல் முடிவை கைவிட செய்தனர். இருப்பினும் அப்பகுதியில் தொடந்து பதற்றம் நிலவியது.
Big breaking: இருளில் தத்தளித்த அதிரை! சாலையில் திரண்ட மக்கள் கூட்டம்!! அனல்பறந்த வாக்குவாதம்!
More like this
உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...
அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...
அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...
அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)
அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...