Home » மன்னிப்பு கடிதம் கொடுத்தார் அதிரை அப்துல் ஜப்பார்!

மன்னிப்பு கடிதம் கொடுத்தார் அதிரை அப்துல் ஜப்பார்!

by டோலோ டோலோ
0 comment

அதிரையில் அப்துல் ஜப்பார் என்பவர் சமூக ஊடகங்களில் வாயிலாக பல்வேறு நபர்கள், இயக்கங்கள், பிரச்சினைகள் குறித்து எழுதியும் பேசியும் வருபவராவர்.

சமீபத்தில் அரசியல் டைம்ஸ் என்கிற வார இதழின் ஆசிரியரை ஒருமையாகவும், தரக்குறைவாகவும் பேசிய ஆடியோ ஒன்று வைரல் ஆனது. இந்த ஆடியோவை ஆதாரமாக கொண்டு அந்த இதழின் மூத்த நிரூபர் ஒருவர் பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார்.

இம்மனு மீதான விசாரணையை காவல்துறை முடுக்கியது, இந்த நிலையில் நேற்று அதிரை காவல் நிலையத்தில் இரு தரப்பையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் ஆடியோவில் பேசியமைக்காக தாம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து சட்ட நடவடிக்கைகளில் இருந்து அப்துல் ஜப்பார் தப்பினார்.

அக் கடிதத்தில் இனிவரும் காலங்களில் நான் யாரையும் மனது புண்படும்படி பேசவோ, எழுதவோ மாட்டேன் என்றும் ஆடியோவில் அவ்வாறு பேசியமைக்காக தாம் மன்னிப்பு கோருவதாகவும் எழுதியதாக கூறப்படுகிறது.

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter