Sunday, November 30, 2025

அடாவடியில் ஈடுபட்ட அதிரை திமுக கவுன்சிலரின் கணவர்! நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு வலியுறுத்தல்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் ARDA அமைப்புக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்ற மருத்துவமனைக்கான கட்டுமான பணியை அதிரை எக்ஸ்பிரஸ் நிருபரும் தனியார் கட்டுமான நிறுவன மேற்பார்வையாளரான முகம்மது சாலிஹ் மேற்கொண்டுவந்தார். அப்போது அங்கு வந்த கவுன்சிலர் கிருத்திகாவின் கணவரான ராஜா, கட்டுமான பணியை சட்டவிரோதமாக நிறுத்தியதுடன் ஆபாசமான வார்த்தைகளை பேசி அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் சாலிஹை தாக்க முயன்றார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதனை கண்டித்து மாற்றத்திற்கான ஊடகவியாளர்கள் மன்றம் தமிழ்நாடு காவல்துறை மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டேக் செய்து ட்வீட் செய்துள்ளது. அதில் அதிராம்பட்டினத்தில் அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளர் முஹம்மது சாலிஹை தகாதவார்த்தையில் திட்டி, தாக்க முயன்ற நகராட்சி திமுக கவுன்சிலர் கிருத்திகாவின் கணவர் ராஜாவை வன்மையாக கண்டிக்கிறோம். காவல்துறையில் அளித்துள்ள புகார் மீது @tnpoliceoffl உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
CC: @mkstalin என குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...
spot_imgspot_imgspot_imgspot_img