Saturday, September 13, 2025

அதிரையில் ததஜ சார்பில் நடந்த இரத்ததான முகாம் – ஏராளமான இரத்த கொடையாளர்கள் தானம் !! (படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இன்று அதிராம்பட்டினம் ஆயிஷா மகளிர் அரங்கில் இரத்த தான முகாம் நடைபெற்றது.

இதில் மாவட்ட மருத்துவ அணியின் அமைப்பாளர் அப்பாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார், அப்போது பேசிய அவர், தஞ்சை இராஜா மிராசுதார் மருத்துவமனை மற்றும் அதிரை ததஜ கிளைகள் சார்பில் நடந்த இந்த மாபெரும் இரத்த தானத்தை பொறுத்தவரை சமீபத்திய அரசு அவசர உயிர்காக்கும் மருத்துவ துறையின் அறிக்கையில் பல மருத்துவமனைகளில் போதிய அகவு இரத்த இருப்பு இல்லை என்றும் இதனால் உயிரிழப்பு உள்ளிட்ட இடர்பாடுகள் அரங்கேறி வருவதாக அது காட்டுகிறது.

இதனை அடுத்து அதிராம்பட்டினம் ததஜ கிளை 1,2 ஆகியவை இணைந்து இந்த இரத்த தான முகாமினை நடத்தி வருகிறார்கள்.

இதே போன்று ஆவனத்தில் விரைவில் மாபெரும் இரத்த தான முகாம் நடத்த இருப்பதாக தெரிவித்த அவர் ததஜவை பொறுத்தவரை முகாம்களில் மட்டுமல்ல அவசர தேவைகளுக்கு கூட இரத்த கொடையளித்து வருகிறார்கள்.

இதற்காகவே பிரத்தியேக செயலி ஒன்றையும் மாநில தலைமை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது..அதன்மூலம் நாளொன்றுக்கு 50க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகிறது எனவும், கொடையாளர்கள் மட்டுமின்றி இரத்தம் தேவை உள்ளவர்களும் இச்செயலி மூலமாக இலகுவாக இரத்தம் பெற இயலும் என்றார்.

முன்னதாக மருத்துவர்கக் கொடையாளர்களை ததஜவின் நிர்வாகிகள் வரவேற்றனர்.

இரத்தம் கொடையளித்த அனைவருக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் பழரசம் வழங்கினர்

.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img