Saturday, September 13, 2025

பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திற்கு நாளை அடிக்கல்! கள ஆய்வு செய்த எம்.எல்.ஏ!

spot_imgspot_imgspot_imgspot_img

பட்டுக்கோட்டை நகராட்சியில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பட்டுக்கோட்டை மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து சட்டமன்றத்தில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கா.அண்ணாதுரை பேசினார். இதனையடுத்து ரூ.20கோடி மதிப்பீட்டில் பட்டுக்கோட்டையில் புதிய பேருந்துநிலையம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்நிலையில் இதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெற உள்ளநிலையில் விழா ஏற்பாட்டு பணிகளை எம்.எல்.ஏ கா.அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது புதிய பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட இருக்கும் வசதிகள் குறித்து கா.அண்ணாதுரையிடம் பொறியாளர்கள் விளக்கினர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img