Monday, May 20, 2024

மக்களின் கொந்தளிப்பை தூண்டாதீர்! அதிரை மின்சார வாரியத்துக்கு முஸ்லீம் லீக் எச்சரிக்கை!!

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் சமீபகாலமாக இரவுநேரத்தில் அடிக்கடி அறிவிக்கப்படாத மின் தடை ஏற்படுகிறது. இதனால் இரவுநேர தூக்கத்தை தொலைக்கும் அதிரை மக்கள், கோடைக்காலத்தில் நிம்மதியின்றி பரிதவிக்கும் சூழல் உள்ளது.

இந்நிலையில் அடிக்கடி மின் தடை ஏற்படுத்தி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி போராட தூண்ட வேண்டாம் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் அதிரை நகர செயலாளர் வழக்கறிஞர் Z.முகம்மது தம்பி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் அவர், தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே அதிரை நகரில் நிகழும் அறிவிக்கப்படாத மின் தடை, மின்சார வாரிய அலுவலக தொலைப்பேசி எண்ணை மக்கள் தொடர்புக்கொண்டால் அதை ஏற்க மறுப்பது உள்ளிட்டவை மூலம் சிறப்பான ஆட்சிக்கு அதிகாரிகள் சிலர் களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் மின்சார வாரிய உயர் அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக பிரச்சனைக்கான தீர்வை காண்பதுடன் தவறிழைக்கும் பணியாளர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் முகம்மது தம்பி வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் அலட்சியமாக இருந்துவிட வேண்டாம் என சுட்டிக் காட்டும் அவர், அதிரை மக்களிடையே கொந்தளிப்பை உருவாக்கி போராட தூண்ட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை: நடுத்தெருவில் ப(லி)ழிவாங்க துடிக்கும் மெகா பள்ளம் – கவுன்சிலர் கணவரின், பொறுப்பற்ற பதிலால் மக்கள் கொதிப்பு !

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகே கடந்த சில...

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....