Saturday, September 13, 2025

ஏண் என்ற கேள்வி! அதிரை நகராட்சி பெயர் பலகைகளில் அல்லல்படும் தமிழ்!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சி ஆவணங்களில் தொடர்ச்சியாக பிழையான தகவல்களும் எழுத்துப்பிழைகளும் அதிகளவில் தென்படுகிறது. குறிப்பாக ரூ.4.42கோடி மதிப்பிலான டெண்டர் ஆவணத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தை மதுரை மாவட்டம் என குறிப்பிட்டது சமீபத்தில் பேசும் பொருளானது. இந்நிலையில் தற்போது அதிரை வீதிகளில் வைக்கப்பட்டு வரும் பெயர் பலகைகளில் செந்தமிழ் சின்னாபின்னமாகி வருகிறது.

பெயர் பலகைகளில் இடம்பெற கூடிய வார்டு எண் என்பதற்கு பதிலாக வார்டு ஏண் என எழுதி பொதுமக்களை குழப்பமடைய செய்திருக்கிறது நகராட்சி. அதாவது வார்டு எதற்கு (ஏன்?) என அதிரை நகராட்சி கேள்வி எழுப்பும் வகையில் அந்த பெயர் பலகைகள் இருப்பதாக மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். சமீபகாலமாக அதிரை நகராட்சி நிர்வாகம் சரிவர இயங்காததின் வெளிப்பாடே இத்தகைய பிழைகளுக்கு காரணம் என்று வேதனை தெரிவிக்கும் பொதுமக்கள், உடனடியாக இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு கவனக்குறைவால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுவதற்கு முன் தகுதிவாய்ந்த அலுவலர்களை அதிரை நகராட்சியில் பணியமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img