Sunday, February 1, 2026

ஔரங்கசீப்பை பெருமைபடுத்துவதா? சிறுவனை கைது செய்த மராட்டிய போலிஸ்.

spot_imgspot_imgspot_imgspot_img

முகலாய பேரரசர் ஔரங்கசீப்பை மகிமைப்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக பீட் மாவட்டத்தில் உள்ள அஷ்தி நகரத்தைச் சேர்ந்த 14 வயது முஸ்லிம் சிறுவன் மீது மகாராஷ்டிர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிறுவன் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் விதிகளின் கீழ், மத உணர்வுகளை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பேசியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக ஒரு புகார் பெறப்பட்டது, அதன் அடிப்படையில் அஸ்தி காவல் நிலையத்தில் குற்றம் பதிவு செய்யப்பட்டது.” என்று பீட் காவல்துறை கண்காணிப்பாளர் நந்த்குமார் தாக்கூர் தெரிவித்துள்ளார் அதன்பிறகு, சில உள்ளூர் இந்துத்துவா அமைப்புகள் இதற்கு பந்த் நடத்த அழைப்பு விடுத்தன.

சிறுவனின் இடுகை நகரத்தில் வகுப்புவாத பதட்டத்திற்கு வழிவகுத்தது என்பதை உணர்ந்த பின்னர், மும்பையில் இருக்கும் சிறுவன் அந்த செய்தியை நீக்கிவிட்டதாகவும், தனது செயல்கள் யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்கும் வீடியோவை பதிவேற்றியதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

“சிறுவன் ஊருக்குத் திரும்பியதும் தடுத்து வைக்கப்பட்டு, குழந்தைகளுக்கான குழந்தைகள் நலக் குழுவின்(சீர் திருத்தக் குழு) முன் ஆஜர்படுத்தப்படுவான்,” என்கிறார் தாக்கூர்.

சிறுவனின்
பதிவுகள் 18 ஆம் நூற்றாண்டின் மைசூர் ஆட்சியாளர் திப்பு சுல்தான் மற்றும் ஔரங்கசீப்பின் படங்களை ஆடியோ செய்திகளுடன் பதிவேற்றப்பட்டுள்ளன. இந்த ஆடியோ செய்திகள் இந்துத்துவ உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாக இந்துத்துவா குழுக்கள் குற்றம் சாட்டியுள்ளன.

கோலாப்பூரில் சமூக ஊடகப் பதிவுகள் வன்முறையாக மாறியதை அடுத்து, 5 சிறார்கள் உட்பட 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

-ஃபைஸ்

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img