Saturday, September 13, 2025

அதிரை கடற்கரைத்தெரு தொடக்கப்பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்ட தொடக்க விழா!(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ்நாடு முழுவதும் உள்ள 31,000 அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 17 லட்சம் மாணவ – மாணவியர் பயன்பெறும் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தை கடந்த 25ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருக்குவளையில் உள்ள தொடக்கப்பள்ளியில் தொடங்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக இன்று அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் திமுக நகர செயலாளரும், நகர்மன்ற துணைத்தலைவருமான இராம. குணசேகரன், 22வது வார்டு செயலாளரும் நகர்மன்ற உறுப்பினருமான செய்யது முஹம்மது, நகர்மன்ற உறுப்பினர்கள் பகுருதீன் மீராசாகிப், அப்துல் மாலிக், வார்டு கழக செயளாலர் முல்லை மதி, கடற்கரைத் தெரு ஜமாஅத் நிர்வாகிகள் அஹமது ஹாஜா, முஹம்மது இஸ்மாயீல், நஸ்ருதீன் சாலிஹ், வார்டு கழக உறுப்பினர்கள் சாகுல் ஹமீது, ஹனி சேக், PL. செய்யது சலாஹுதீன் ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு காலை உணவு வழங்கினர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img