Saturday, September 13, 2025

எர்ணாகுளம் நிரந்தர ரயில் – அதிரைக்கு நிறுத்தம் வழங்கி ரயில்வே வாரியம் அறிவிப்பு!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் வழியாக எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாரம் ஒருமுறை சிறப்பு ரயில் கடந்த ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது. வாரம் ஒருமுறை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வண்டி எண் 06035, 06036 என்ற எண்ணுடன் இயக்கப்பட்டு வந்த இந்த ரயிலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்த சிறப்பு ரயில் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய நிறுத்தங்களில் நின்று சென்ற நிலையில், இந்த ரயிலை வாரம் இருமுறை விரைவு ரயிலாக மாற்றி அறிவித்த தெற்கு ரயில்வே, அதிராம்பட்டினம், பேராவூரணி போன்ற நிறுத்தங்களை நீக்கியும் அறிவிப்பு வெளியிட்டது. இது இப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், 28/08/2023 முதல் 18/09/2023 வரை எர்ணாகுளம் – வேளாங்கண்ணி விரைவு ரயில் 16361, 16362 என்ற எண்ணில் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் திருத்தப்பட்ட நிறுத்தங்களுடன் நிரந்தர சேவையாகவும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 06035, 06036 என்ற எண்ணில் வழக்கமான நிறுத்தங்களுடன் சிறப்பு ரயிலாக இயங்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. வரும் 25/09/2023 முதல் திருத்தப்பட்ட நிறுத்தங்களுடன் வாரம் இருமுறை நிரந்தர சேவையாக எர்ணாகுளம் – வேளாங்கண்ணி ரயில்(வண்டி எண் 16361,16362) இயங்கும்.

இந்நிலையில் ரயில்வே வாரியம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், எர்ணாகுளம் – வேளாங்கண்ணி விரைவு ரயிலுக்கு இரு மார்க்கத்திலும் அதிராம்பட்டினம், பேராவூரணி, மானாமதுரை, சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, தென்மலை, அவுநீ, குண்டார, சாஸ்தான்கோட்ட, கருநகபள்ளி, மாவேலிக்கரை ஆகிய ஊர்களுக்கு நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் சங்கம், பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்பாளர் சங்கம், பழனிமாணிக்கம் எம்பி, மேலும் இதற்காக முயற்சி செய்த அனைவருக்கும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கூடிய விரைவில் தாம்பரம் – செங்கோட்டை வாரம் மும்முறை அதிவிரைவு ரயிலுக்கு நிறுத்தம் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் அதிராம்பட்டினம் ரயில் பயணிகள்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img