Saturday, September 13, 2025

குவைத்தில் குடியிருப்பு சட்டத்தை மீறிய 120 பேர் கைது!

spot_imgspot_imgspot_imgspot_img

குவைத்தில் கபத் பகுதியில் இன்று கடுமையான பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டன.

இந்த சோதனையில் குடியிருப்பு சட்டத்தை மீறிய 120 பேரை கைது செய்ததாக சற்றுமுன் செய்தி வெளியாகியுள்ளது. ஜஹ்ரா பாதுகாப்பு இயக்குநரகத்தின் பிரிகேடியர் ஜெனரல் சலே அல்-அஸ்மி, இயக்குனர் பிரிகேடியர் ஜெனரல் முஹம்மது அல்-இப்ராஹிம் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.

200க்கும் மேற்பட்டோரின் ஆவணங்களை சரிபார்த்து குடியிருப்பு சட்டத்தை மீறியதாக 120 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சிலர் தங்கள் ஸ்பான்சர்களிடமிருந்து தப்பி ஓடிய நபர்கள் எனவும், மற்றவர்கள் ஸ்பான்சர்களின் கீழ் வேலை செய்யாத வீட்டு வேலைக்காக வந்து சட்டவிரோதமாக வேலை செய்து வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அனைவரும் நாடு கடத்தல் சிறைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

Source – Kuwait tamil pasanga

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!

சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...

துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது. தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...

ASDO – UAE எழுவர் கால்பந்து போட்டியில் அதிரை அணி...

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 02/02/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ASDO - UAE எழுவர் கால்பந்து போட்டி நடைபெறுகிறது. இதில் அதிரை, நாகூர்,...
spot_imgspot_imgspot_imgspot_img