Saturday, September 13, 2025

Big breaking: அதிரையுடன் சுற்றுவட்டார கிராமங்களை இணைக்க ஆர்வம் காட்டும் நகராட்சி! மெஜாரிட்டியை இழக்க போகும் இஸ்லாமியர்கள்!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சி கடந்த 2021ம் ஆண்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. முறையான சாலை, கழிவுநீர் வடிகால், மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத அதிராம்பட்டினத்தை நகராட்சியாக தரம் உயர்த்த கூடாது என அப்போதே எதிர்ப்புகள் கிளம்பின. இதனிடையே வார்டு மறுவரையறையில் குளறுபடிகள் செய்து இஸ்லாமியர்களின் பிரதிநிதிதுவத்தை வேண்டுமென்றே திட்டமிட்டு குறைத்துவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்தசூழலில் முழுமையாக வளர்ச்சிபெறாத அதிரையுடன் சுற்றுவட்டார கிராமங்களான ஏரிபுறக்கரை, மழவேனிற்காடு மற்றும் நரசிங்கபுரம் ஊராட்சிகளை இணைக்க நகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான தீர்மானம் நாளை திங்கள்கிழமை மாலை நடைபெறும் நகர்மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளது. இதனால் அதிரை அரசியலில் இஸ்லாமியர்கள் மெஜாரிட்டி பிரதிநிதிதுவத்தை இழக்கும் அபாயம் உருவாகி இருப்பதுடன் அடுத்த நகராட்சி தலைவர் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர் வர வாய்ப்பே இல்லை என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img