Saturday, September 13, 2025

அதிரையில் இஸ்ரேலை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் – பாலஸ்தீன் மீதான தாக்குதலை நிறுத்த வலியுறுத்தல்!(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

பாலஸ்தீன மக்கள் மீது இரக்கமற்ற தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலை கண்டித்தும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பாலஸ்தீன நிலத்திற்கு ஒன்றிய அரசு துணை நிற்க வலியுறுத்தியும், பயங்கரவாத இஸ்ரேலிய அரசுக்கு ஒன்றிய அரசு துணை போகக்கூடாது என்பதை வலியுறுத்தியும் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

அநீதிக்கெதிரான பேரமைப்பு சார்பில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மாலை 4 மணியளவில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அநீதிக்கெதிரான பேரமைப்பின் சார்பில் ஹசன், வரவேற்புரை ஆற்றினார். அநீதிக்கெதிரான பேரமைப்பைச் சேர்ந்த பஷீர் தலைமை உரையாற்றினார். இதில் பிரபல இஸ்லாமிய பேச்சாளர் மௌலானா சம்சுதீன் காஸிமி கண்டன உரையாற்றினார்.

இந்த கண்டன ஆர்பாட்டத்தில் அதிரையை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் பெருந்திரளாக கலந்துகொண்டு இஸ்ரேலுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.


spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img