Wednesday, March 18, 2026

டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாள் – மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிரை முத்தம்மாள் தெரு இளைஞர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்தவரும், சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக குரல் கொடுத்தவருமான டாக்டர். அம்பேத்கரின் நினைவு நாள் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

இந்நாளை நினைவு கூறும் விதமாக இன்று காலை முதல் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தபால் நிலையம் அருகே அமைந்துள்ள டாக்டர். அம்பேத்கரின் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமூகர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதன் ஒரு பகுதியாக அதிரை முத்தம்மாள் தெரு இளைஞர்கள் ஜெயசூர்யா, திவாகர், திருமாயவன் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் இந்நிகழ்வு குறித்து அவர்கள் கூறுகையில், தற்போதைய கால சூழ்நிலையில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் ஒவ்வொரு நிகழ்வுகளையும், சட்டத்திட்டங்களையும் அனைத்து இளைஞர்களும் அறிந்து அவ்வழியில் செயல்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் என்று தெரிவித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப்...

அதிராம்பட்டினம்:  நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும்...

பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. திறந்து வைத்த உதயநிதி...

பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து...
spot_imgspot_imgspot_imgspot_img