Wednesday, March 18, 2026

அதிரை : சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு – அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்த சோகம் !

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் B.com மூன்றாம் ஆண்டு பயின்று வந்துள்ளார் ஃபவாஸ் வயது 19.

இந்நிலையில் இன்றைய தினம் காலை 11மணியளவில் அதிரை எரிப்புறக்கரை சாலையில் சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவர் மீது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியதாக கூறப்படுகிறது.

இதில் மாணவர் முஹம்மது ஃபவாஸ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்துள்ளார், இதனை கண்ட அப்பகுதி மக்கள் அவசர சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.

அதிரை மாணவனின் மரண சம்பவம் அதிரை மக்கள் மத்தியில் பெரும் அதிர்வையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img