மரண அறிவிப்பு : மேலத்தெரு வாவன்கனி வீதியைச் சேர்ந்த அம்பேலா என்கின்ற முகமது ஷரீப் அவர்களின் மகளும், வாத்தி குடும்பத்தை சேர்ந்த S. அப்துல் காதர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் எம்.எஸ். அமானுல்லா, எம்.எஸ். அப்துல் கரீம், எம் எஸ். முகமது பாசின் ஆகியோரின் சகோதரியும், அப்துல் வஹாப், ஹாஜா அலாவுதீன், அபுபக்கர் ஆகியோரின் மாமியாரும், மர்ஹும். அப்துல் மாலிக், சாகுல் ஹமீது, பீர், முகமது முகமத் ஆகியோரின் தாயாருமாகிய ரசூல் பிவி அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 8 மணியளவில் பெரிய ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.