பட்டுக்கோட்டை முஸ்லீம் தெருவில் இருக்கும் முகைதீன் ஆண்டவர் பெரிய பள்ளிவாசல் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அங்கு இரண்டு அணிகளுக்கு நிர்வாகத்தில் பங்குபெற போட்டா போட்டி நிலவி வருகிறது. இதனால் பள்ளியின் வக்பு நிலங்களை பராமிரிப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
இதுதவிர மராமத்து பணிகளும் மந்த கதியில் நடைபெறுவதால் தொழுகையாளிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.
இதனை கருத்திற்கொண்டு பள்ளிவாசல் தெரு இஸ்லாமிய பொதுமக்கள் நிர்வாக தேர்தலை நடத்த வேண்டும் என கூறி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளதாக பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
உயர்நீதி மன்ற தீர்ப்பை உடனடியாக தமிழக வக்பு வாரியம் செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நடக்க இருக்கும் இந்த ஆர்பாட்டத்திற்கு இஸ்லாமிய மக்கள் அனைவரையும் அழைப்பதாக அதில் குறிப்பிட்டிருக்கின்றனர்.
More like this

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...
அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு!
அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.
அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.
வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்...





