பட்டுக்கோட்டை முஸ்லீம் தெருவில் இருக்கும் முகைதீன் ஆண்டவர் பெரிய பள்ளிவாசல் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அங்கு இரண்டு அணிகளுக்கு நிர்வாகத்தில் பங்குபெற போட்டா போட்டி நிலவி வருகிறது. இதனால் பள்ளியின் வக்பு நிலங்களை பராமிரிப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
இதுதவிர மராமத்து பணிகளும் மந்த கதியில் நடைபெறுவதால் தொழுகையாளிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.
இதனை கருத்திற்கொண்டு பள்ளிவாசல் தெரு இஸ்லாமிய பொதுமக்கள் நிர்வாக தேர்தலை நடத்த வேண்டும் என கூறி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளதாக பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
உயர்நீதி மன்ற தீர்ப்பை உடனடியாக தமிழக வக்பு வாரியம் செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நடக்க இருக்கும் இந்த ஆர்பாட்டத்திற்கு இஸ்லாமிய மக்கள் அனைவரையும் அழைப்பதாக அதில் குறிப்பிட்டிருக்கின்றனர்.
More like this

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த...
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப்...
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும்...

பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. திறந்து வைத்த உதயநிதி...
பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து...





