Saturday, September 13, 2025

ரமலான் கேள்வி பதில் போட்டியில் அனைவரும் பங்கேற்க வேண்டும்! -அதிரை ஆஷிகா கோரிக்கை

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை புதுமனை தெருவை சேர்ந்தவர் ஆஷிகா, கடந்த ஆண்டு அதிரை எக்ஸ்பிரஸ் நடத்திய இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டியில் முதலிடம் பிடித்து 2 கிராம் தங்க நாணயம் மற்றும் கேடயத்தை தட்டிச்சென்றார். மேலும் ஆஷிகாவை பாராட்டி ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி பாராட்டு கடிதம் வழங்கி சிறப்பித்தார்.

இந்த ஆண்டுக்கான இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரமலான் பிறை 1 முதல் 15வரை சஹர் நேரத்தில் போட்டிக்கான கேள்விகள் அதிரை எக்ஸ்பிரஸ் இணையத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான போட்டி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ள ஆஷிகா, கடந்த ஆண்டு அதிரை எக்ஸ்பிரஸ் போட்டியில் பங்கேற்றது தனக்கு மிகவும் பயனுள்ளதாகவும் , நேரத்தை நல்வழியில் செலவு செய்யும் வகையில் அமைந்ததாக குறிப்பிட்டுள்ளார். இன்ஷா அல்லாஹ் இந்த வருடம் ரமலான் போட்டியிலும் அனைவரும் கலந்து கொண்டு புனிதமான ரமலானை நல்வழியில் செலவு செய்ய அல்லாஹ் அனைவருக்கும் கிருபை செய்வானாக எனவும் பிரார்த்தனை செய்திருக்கிறார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img