Sunday, February 1, 2026

ரமலான் கேள்வி பதில் போட்டியில் அனைவரும் பங்கேற்க வேண்டும்! -அதிரை ஆஷிகா கோரிக்கை

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை புதுமனை தெருவை சேர்ந்தவர் ஆஷிகா, கடந்த ஆண்டு அதிரை எக்ஸ்பிரஸ் நடத்திய இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டியில் முதலிடம் பிடித்து 2 கிராம் தங்க நாணயம் மற்றும் கேடயத்தை தட்டிச்சென்றார். மேலும் ஆஷிகாவை பாராட்டி ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி பாராட்டு கடிதம் வழங்கி சிறப்பித்தார்.

இந்த ஆண்டுக்கான இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரமலான் பிறை 1 முதல் 15வரை சஹர் நேரத்தில் போட்டிக்கான கேள்விகள் அதிரை எக்ஸ்பிரஸ் இணையத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான போட்டி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ள ஆஷிகா, கடந்த ஆண்டு அதிரை எக்ஸ்பிரஸ் போட்டியில் பங்கேற்றது தனக்கு மிகவும் பயனுள்ளதாகவும் , நேரத்தை நல்வழியில் செலவு செய்யும் வகையில் அமைந்ததாக குறிப்பிட்டுள்ளார். இன்ஷா அல்லாஹ் இந்த வருடம் ரமலான் போட்டியிலும் அனைவரும் கலந்து கொண்டு புனிதமான ரமலானை நல்வழியில் செலவு செய்ய அல்லாஹ் அனைவருக்கும் கிருபை செய்வானாக எனவும் பிரார்த்தனை செய்திருக்கிறார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...
spot_imgspot_imgspot_imgspot_img