செட்டித்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.சே.ஷேக் முகமது மரைக்காயர், மர்ஹூம் சே.கா.ஹாஜா முகைதீன் ஆகியோரின் பேரனும், மர்ஹும் புலவர் அப்பா மர்ஹூம் S.அபுல் ஹசன் அவர்களின் மகனும், மர்ஹூம் முஹம்மது ஹசனார் லெப்பை அவர்களின் மருமகனும், முஹம்மது உமர் அவர்களின் மைத்துனரும், சேக் மதீனா, தமீம் அன்சாரி, அஹம்மது இப்ராஹிம் ஆகியோரின் சகோதரரும், முஹம்மது யூசுஃப் என்கின்ற ஹாகில் ஹஸன் அவர்களின் தகப்பனாருமாகிய A.H. ஜமால் முகம்மது அவர்கள் நேற்று(11/03/24) சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா புதுத்தெரு இல்லத்தில் வைக்கப்பட்டு இன்ஷா அல்லாஹ் இன்று(12/03/24) மாலை 5 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.