Saturday, September 13, 2025

அதிரையில் தென்பட்டது ஷவ்வால் பிறை! நாளை நோன்பு பெருநாள்!

spot_imgspot_imgspot_imgspot_img

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது கடமையாகும். அந்த வகையில் இந்த ஆண்டும் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வந்தனர். இன்று அரபு நாடுகள், மேற்கத்திய நாடுகளில் நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்ட நிலையில், நேற்று பிறை தென்படாததால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இன்று 30வது நோன்பு பூர்த்தி செய்யப்பட்டது.

அதனடிப்படையில் இன்று மாலை ஷவ்வால் 1ம் பிறை தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தென்பட்டது. அதனடிப்படையில் நாளை அதிரை உட்பட தமிழ்நாடு முழுவதும் ஈதுல் ஃபித்ர் எனப்படும் நோன்பு பெருநாள் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் மற்றும் அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்களுக்கு, ஈதுல் ஃபித்ர் என்னும் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்களை அதிரை எக்ஸ்பிரஸ் குடும்பத்தினர் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img