Saturday, September 13, 2025

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள் தொகையை கொண்டுள்ள இப்பகுதியில் காலி மனைகள் ஏராளமாக உள்ளது.

அதில் சில தனியாருக்கு சொந்தமன மனைகளில் புதர் மண்டி இருள் சூழ்ந்து காணப்படுவதோடு, மழைநீரூம் தேங்கி உள்ளது.

சமீபத்தில் பெய்த கன மழையினால் அப்பகுதியில் மழை நீர் தேங்கி இருக்கிறது, இது குறித்து ஊராட்சி தலைவர் சக்தியிடம் புகார் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும், கவுன்சிலர் தமீம் இந்த விவகாரம் குறித்து எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தேங்கியுள்ள மழை நீரில் விஷ ஜந்துக்கள் நடமாடி வருகிறது கொடிய விஷம் கொண்ட பாம்புகள் அவ்வப்போது தரைப்பகுதிகளில் தென்படுவதாகவும் இதனால் பள்ளிக்கூட விடுமுறையில் இருக்கும் பிள்ளைகளை வெளியில் சென்று விளையாட கூட அனுமதிக்க முடியவில்லை என ஆதங்கப்படுகிறார்கள்.

எனவே ஊராட்சி நிர்வாகம் மெத்தனப் போக்கை களைந்து தனியார் வீட்டு மனைகளில் தேங்கியுள்ள நீரை அகற்றுவதோடு சம்பந்தப்பட்ட மனை உரிமையாளர்களிடம் மனையை பராமரிக்க உத்தரவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img