அதிராம்பட்டினத்தில் வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 13ம் ஆண்டு மாநில அளவிலான எழுவர் கால்பந்து தொடர் போட்டி இன்று தொடங்கியது.
அதிராம்பட்டினம் மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் தொடங்கிய இத்தொடரில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற முதலாம் நாள் ஆட்டத்தில் ராயல் FC அதிராம்பட்டினம் அணியினரும் தர்மபுரி FC தர்மபுரி அணியினரும் மோதினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தர்மபுரி FC தர்மபுரி அணி, 1-0 என்ற கோல் கணக்கில் ராயல் FC அதிராம்பட்டினம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
முன்னதாக இன்று நடைபெற்ற போட்டி தொடரின் தொடக்க நிகழ்வில் முன்னாள் கால்பந்தாட்ட வீரர்கள், முக்கியஸ்தர்கள், அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
நாளைய(19/07/2024) தினம் விளையாட வேண்டிய அணிகள் :
மன்னை FC vs AFC ஆலத்தூர்
இடம் : பெரிய மருதநாயகம் மைதானம், மேலத்தெரு, அதிராம்பட்டினம்















