Saturday, September 13, 2025

அதிரையில் அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் தொடக்கம்!

spot_imgspot_imgspot_imgspot_img

பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 14-ந் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி, பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் வேட்டி சேலையுடன் கூடிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது. அதற்கான டோக்கன்களும் ரேசன் கடை விற்பனையாளர்கள் மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று பொங்கல் பரிசு விநியோகத்தை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு ரேசன் கடையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அந்தவகையில் அதிரையில் உள்ள ரேசன் கடைகளிலும் பொங்கல் பரிசு விநியோகம் நேற்று தொடங்கியது. தொடர்ந்து இன்று அதிரை கடற்கரைத்தெருவில் உள்ள ரேசன் கடையில் பொங்கல் பரிசு விநியோகம் இன்று தொடங்கியது.

இன்று நடைபெற்ற பரிசுத்தொகுப்பு தொடக்க நிகழ்வில், அதிரை திமுக கிழக்கு செயலாளரும், நகரமன்ற துணைத் தலைவருமான இராம. குணசேகரன், 22வது வார்டு செயலாளரும் நகரமன்ற உறுப்பினருமான செய்யது முஹம்மது, கடற்கரைத்தெரு ஜமாத் தலைவர் அஹமது ஹாஜா, செயலாளர் முஹம்மது இஸ்மாயீல் ஆகியோர் நிகழ்வை தொடங்கிவைத்து பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பை வழங்கினர். இந்நிகழ்வில் 22வது வார்டுக்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது உள்ளிட்ட திமுகவினர் பங்கேற்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img