Wednesday, February 4, 2026

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி கவனம் செலுத்த வேண்டும்.

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கியாக இருந்த இந்தப் பகுதியின் வாக்காளர்கள், கட்சியிடமிருந்து கசப்புத்தன்மையை உணரத்தொடங்கியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என உள்ளூர் சமூகப் பிரமுகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடம், சிறுபான்மை சமூகத்தின் கல்வி மற்றும் சமூக நலனுக்கான முக்கிய அடையாளமாக இருந்து வருகிறது. இந்தப் பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை உள்ளூர் திமுகவினர் சட்டவிரோதமாகக் கையகப்படுத்த முயன்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

முக்கியமாக, முன்னாள் தஞ்சை ஆட்சியர் ராஜாராம் அவர்களின் சிபாரிசு கடிதத்தில், “இந்த நிலத்தின் குத்தகையை நீட்டிப்பு செய்ய கோரியுள்ளனர். அதிராம்பட்டினம் கல்வி அறக்கட்டளைக்கு கிரயமாக (குறைந்த விலையில்) விற்பனை செய்யலாம்” என்று அதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் இமாம் ஷாஃபி நில விவகாரத்தில் உள்ளூர் திமுகவின் முக்கிய நபர் “உள் நோக்கத்துடன் செயல்படுகிறார்” என ஆட்சியர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆவணங்கள், சட்டவிரோத கையகப்படுத்தலுக்கு உள்ளூர் திமுகவினரின் திட்டமிட்ட முயற்சியை வெளிப்படுத்துகின்றன.
இதற்கு எதிராக, பள்ளி நிர்வாகமும் சிறுபான்மை சமூகமும் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர். நீதிமன்றத் இடைக்கால தடையால் சட்டவிரோத கையகப்படுத்தல் தடுக்கப்பட்டது.

இருப்பினும், திமுகவினர் தொடர் அழுத்தங்களையும் சீண்டல்களையும் தொடர்ந்து மேற்கொண்டனர், இதன் விளைவாக 11 நாட்கள் தொடர் போராட்டம் நடைபெற்றது.

இடைக்காலத் தடை:

கையகப்படுத்தல் பணி பாதியில் நின்றதுஇன்று (டிசம்பர் 20, 2025) மீண்டும் நிலத்தைக் கையகப்படுத்தும் பணிகளைத் தொடங்க முயன்ற உள்ளூர் அதிகாரிகள், நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவால் பணிகளைப் பாதியிலேயே நிறுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம், சிறுபான்மை சமூகத்தில் மேலும் கோபத்தைத் தூண்டியுள்ளது.

“ஆட்சியரின் சிபாரிசு மீறி, திமுகவினர் உள் நோக்கத்துடன் செயல்படுகின்றனர்” என்று உள்ளூர் தலைவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.உள்ளூர் வாசிகள் கூறுகையில், “இது வெறும் நில விவகாரம் அல்ல; சிறுபான்மை உரிமைகளுக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதல்” என்றனர்.

போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், “இந்தப் பள்ளி நமது எதிர்காலம். ஆட்சியரின் கடிதத்தை அரசு செயல்படுத்த வேண்டும்” என்று கோரினர்.

2026 தேர்தல்: வாக்கு வங்கி மாற்றம் திமுகவுக்கு எச்சரிக்கை அதிராம்பட்டினம் பகுதி, திமுகவின் வலுவான வாக்கு வங்கியாக இருந்து வருகிறது. ஆனால், முன்னாள் ஆட்சியரின் சிபாரிசு மீறிய சீண்டல்கள் சிறுபான்மை வாக்காளர்களிடையே மனமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. 2026 தேர்தலில் இது திமுகவுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தலாம்  எச்சரிக்கை .

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...
spot_imgspot_imgspot_imgspot_img