அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.இதில் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில், துணை ஆய்வாளர்கள் மஹாராஜா, விஜய் ஆனந்த் உள்ளிட்ட காவலர்கள், பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். விழாவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, அன்பும் மகிழ்ச்சியும் பகிர்ந்து கொண்டனர்.இந்த விழா, சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் நடைபெற்றது.








