அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும், ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.
அன்னாரின் மறைவையொட்டி பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது இரங்கலைத் தெரிவித்துக் உள்ளார்.
அதே இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச்செயலாளர் திரு. அபூபக்கர் அவர்கள் நேரில் சென்று மறைந்த எம்.எஸ். தாஜூதீன் அவர்களின் குடும்பத்தினரையும் உறவினர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
மேலும், மறைந்த தலைவர் அவர்கள் கல்வி, சமூக நலன் மற்றும் மனிதநேய பணிகளுக்காக விட்டு சென்ற உயரிய நல்லறங்களை அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார்.









