திராவிட இஸ்லாமியக்கழகத்தின் சென்னை மண்டல ஒருங்கிணைப்பு கூட்டம் தனியார் அரங்கில் நடைபெற்றது. மாநில தலைவர் அபுகிதர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழக அரசின் சமீபகால நடவடிக்கைகள் குறித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய அபுகிதர், “திராவிடமும் தமிழர்களும் ஒன்றோடு ஒன்று இணைந்த சமூகமாகும். வாழ்வியல் நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோமே தவிர, நாம் அரபு நாட்டின் இறக்குமதிகள் அல்ல” என்று தெரிவித்தார். மேலும், “வரவிருக்கும் தேர்தலில் அடிமட்ட தொண்டர்களின் ஆழ்மனதின் வெளிப்பாடாக இருந்து செயல்படுவோம். எங்களுக்கு பதவி, பந்தா, பகட்டு தேவையில்லை. தமிழர் சமூகம் விழிப்புணர்ச்சியுடன் முன்னேறி வருகிறது” எனக் கூறினார்.
இந்த ஒருங்கிணைப்பு கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் அசாருதீன், மாநில பொருளாளர் அதிரை நிஜார் அகமது, துணைத்தலைவர் முகம்மது இலியாஸ், துணைப் பொதுச்செயலாளர் ரஃபீக் அகமது, மோத்திபாவா, இம்தியாஸ், யூசுப் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.











