Saturday, February 28, 2026

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த DTCP (நகர்ப்புற மற்றும் ஊரக திட்டமிடல் துறை) மற்றும் நகராட்சி தகவல் அலுவலர் வழங்கிய தகவலில், கட்டிடத்திற்கு உரிய திட்ட அனுமதி வழங்கப்பட்டதாக பதிவுகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் வெளிவந்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட முக்கிய நிர்வாகக் கட்டிடத்திற்கே தேவையான சட்டப்பூர்வ அனுமதி இல்லையெனில், அது எவ்வாறு கட்டப்பட்டது?மக்களின் 5கோடி வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது, இந்த விரயத்திற்கு யார் பொறுப்பு ஏற்க வேண்டும்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

சாமானிய மக்கள் கட்டும் கட்டிடத்திற்கு அப்ரூவல் வழங்க இழுத்தடிக்கும் நகராட்சி அலுவலர்கள், நகராட்சி கட்டிடத்திற்கு எவ்வத ஒப்புதலும் இல்லாமல் அனுமதி வழங்கியது எப்படி என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரமலான் தொடக்கத்தை முன்னிட்டு மாதாந்திர மின் பராமரிப்பு பணியை தள்ளிவைக்க கோரிக்கை.

ரமலான் மாதம் நாளை முதல் தொடங்க உள்ள நிலையில், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்டிருந்த மாதாந்திர மின் பராமரிப்பு பணியை மாற்றி...

மரண அறிவிப்பு-முட்டைக்கடை ஜெஹபர் அலி.

மேலத்தெருவை சேர்ந்த முட்டைக்கடை கபீர் அவர்களின் மகனும்,மர்ஹும் தம்பி சுல்தான் அவர்களின் மருமகனும், கமாலுதீன்,சேகப்துல் காதர்,சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், அகமது அஜாரின்...

நன்றி உறவுகளே…

திரும்பி பார்க்கிறோம்… கடந்து வந்த பாதை எவ்வளவுகரடு முரடானது என்று…எத்தனை வலிகள், வேதனைகள் சொல்லி முடிக்க முடியாதது…அத்தோடு முடிந்துவிடவில்லை தொடர் மிரட்டல்கள், அதட்டல்கள் –...
spot_imgspot_imgspot_imgspot_img