Sunday, September 14, 2025

ரயில்களில் டைனமிக் கட்டண முறை குறித்து அமைச்சர் பியூஷ் கோயல்

spot_imgspot_imgspot_imgspot_img

பயணிகளின் முன்பதிவுக்கு ஏற்ப மாறும் டைனமிக் கட்டணம் முறையை மறுபரிசீலனை செய்து வருவதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது பதிலளித்த அவர், ரயில்களில் முன்பதிவு அதிகமாகும்போது, அதற்கேற்ப கட்டணமும் அதிகரிக்கும் டைனமிக் முறை, ரயில்வேயின் வருவாயை அதிகரிக்க உதவுவதாக தெரிவித்தார்.

மேலும், டைனமிக் முறையால் ரயில்வேக்கு வருமானம் அதிகரித்தாலும்,பண்டிகையல்லாத காலங்களில் பயணிகளுக்கு தள்ளுபடி வழங்கப்படும் என்று கூறிய அவர், கட்டண நிர்ணயம் தொடர்பான அறிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

தற்போது, ரயில்வேயில் 100 ஆண்டு பழமையான சிக்னல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறிய அவர், விரைவில் சிக்னல்கள் அனைத்தும் நவீனமயமாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : AFFA அணியின் வேகத்தில்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கால்பந்து தொடர்களில் தலைசிறந்து விளங்கும்...

தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : ஆலத்தூரை சாய்த்து, வெற்றிக்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி கடந்த 20.06.2025 வெள்ளிக்கிழமை AFWA வின் மைதான திறப்பு...

வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்கள் எந்த உத்தரவும்...

வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991க்கு எதிராக தொடரப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று...
spot_imgspot_imgspot_imgspot_img