Monday, December 1, 2025

ஒரு மாநில தேர்தலுக்காக மற்றொரு மாநிலத்தின் வாழ்வாதாரத்தை நசுக்கும் மத்திய பாஜக அரசு !

spot_imgspot_imgspot_imgspot_img

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய பாஜக அரசின் துரோகங்கள் தொடருகின்றன. இப்போது கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் பிரதமரும் அமைச்சர்களும் பங்கேற்றிருப்பதால் மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெற இயலவில்லை என இன்னொரு சாக்குப் போக்கை சொல்லி மீண்டும் தமிழகத்தின் முதுகில் குத்தியிருக்கிறது மத்திய பாஜக அரசு.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என 6 வார கால கெடு விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் 6 வாரம் கழித்து நீங்க சொன்னது ஸ்கீமா? வாரியமா? என கேள்வியை கேட்டது உச்சநீதிமன்றம்.
உச்சநீதிமன்றமும் உரிய விளக்கம் அளிக்காமல் நாங்கள் சொன்ன தீர்ப்பை செயல்படுத்த ஒருவரைவு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். மே 3ந்- தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த முறையும் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்திருக்கிறது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வரைவு அறிக்கையை இன்று தாக்கல் செய்யவில்லை. இதற்கு சொல்லியிருக்கும் அடேங்கப்பா காரணம்தான் அதிசயிக்க வைக்கிறது.

கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் பிரதமரும் அமைச்சர்களும் இருக்கிறார்கள்.. ஆகையால் வரைவு அறிக்கைக்கான ஒப்புதலைப் பெற முடியவில்லை என பச்சை பொய்யை சொல்லியிருக்கிறது மத்திய பாஜக அரசு.

இதே மத்திய பாஜக அரசு நேற்றுதான் உச்சநீதிமன்றத்தில், வரைவு அறிக்கை இன்னும் தயாராகவே இல்லை; ஆகையால் 2 வார கால அவகாசம் கேட்டிருந்தது. இன்று வரைவு அறிக்கை தயாராகிவிட்டது; மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெற முடியவில்லை என ஜால்ஜால்ப்பு சொல்லியிருக்கிறது.

அதே நேரத்தில் மத்திய பாஜக அரசு, கர்நாடகா தேர்தல் நடைபெறுவதால்தான் மேலாண்மை வாரியத்தில் தமிழகத்துக்கு இத்தனை துரோகங்கள் என்பதை பகிரங்கமாகவே ஒப்புக் கொண்டிருக்கிறது. இதைத்தான் தமிழகம் தொடர்ந்து கூறியும் வருகிறது.
தற்போது இந்த உண்மையை உச்சநீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு. கர்நாடகா தேர்தல் முடிந்த பின்னராவது மத்திய பாஜக அரசு மேலாண்மை வாரியம் அமைக்குமா? அதன் துரோகங்கள் தொடருமா? என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : AFFA அணியின் வேகத்தில்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கால்பந்து தொடர்களில் தலைசிறந்து விளங்கும்...

தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : ஆலத்தூரை சாய்த்து, வெற்றிக்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி கடந்த 20.06.2025 வெள்ளிக்கிழமை AFWA வின் மைதான திறப்பு...

வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்கள் எந்த உத்தரவும்...

வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991க்கு எதிராக தொடரப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று...
spot_imgspot_imgspot_imgspot_img