முக்கிய அறிவிப்பு!
குடிநீர் மின் மோட்டார்களை பறிமுதல் செய்ய அதிரைக்கு அதிகாரிகள் வருகை புரிந்ததை ஒட்டி அதிரை சமூக நல கூட்டியக்கம் சார்பில் இன்று காலை கூடி அதிகரிகளிடம் முக்கிய கோரிக்கை வைத்தோம்.
அதிரையில் சீரான முறையில் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வழங்கப் படுவதில்லை. மேடான பகுதிகளில் குடிநீர் சுத்தமாக வருவதில்லை. இதனாலேயே சிலர் மின் மோட்டோர் பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. எனவே அதனை முதலில் சரி செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கையும், மனுவும் அளிக்கப் பட்டது.
எனினும் மேலதிகாரிகளின் உத்தரவின்படி காவல்துறை உதவியுடன் மின் மோட்டோர் பயன்படுத்தும் வீடுகளில் அதிரடியாக நுழைந்து மின் மோட்டோர்களை பறிமுதல் செய்யவிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. எனவே அதிகாரிகள் தங்கள் வீடுகளுக்கு வந்தால் அவர்களை அனுமதிக்க வேண்டாம் மேலும் அனைத்து பகுதிகளுக்கும் சீரான முறையில் குடிநீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ஒவ்வொரு மக்களும் வலியுறுத்துங்கள்.
இப்படிக்கு
அதிரை சமூக நல கூட்டியக்கம்