Sunday, September 14, 2025

கைவிட்ட பேரூராட்சி ! கையில் எடுத்த கடற்கரைத்தெருவாசிகள் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் உள்ள மிகப்பெரிய தெருக்களில் கடற்கரைத் தெருவும் ஒன்று. இத்தெருவில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு அரசின் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி மற்றும் அரசின் அங்கன்வாடி நிலையம் உள்ளிட்டவைகள் உள்ளன.

கடற்கரைத்தெருவின் பிரதான பிரச்சனைகளுள் சாக்கடை பிரச்சனையும் ஒன்று. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி நிலையம் அருகே செல்லும் இந்த கழிவுநீர் கால்வாயை சீரமைத்து தர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. ஏனென்றால் சுத்தம் செய்யப்படாத அந்த கழிவுநீர் கால்வாயால் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டுவிடும் என்பது பொதுமக்களின் அச்சம்.

இப்பிரச்சனை தொடர்பாக கடற்கரைத்தெரு இளைஞர்களும் முஹால்லவாசிகளும் அதிரை பேரூராட்சி நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை மனு அளித்தும் , நேரில் சென்று வலியுறுத்தியும் அதிரை பேரூராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கடற்கரைத்தெரு வாசிகள் , இனியும் பேரூராட்சியை நம்பி பலனில்லை என்று தாங்களே களத்தில் இறங்கி கழிவுநீர் வடிகாலை தூய்மைப்படுத்தினர். அதிரை கடற்கரைத்தெரு வாசிகளின் இச்செயல் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img