Monday, April 29, 2024

அதிரையில் அதிகரிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ! குடிநீரை விலைகொடுத்து வாங்கும் அவலம் !!

Share post:

Date:

- Advertisement -

 

அதிராம்பட்டினம் பேரூரில் சுமார் 75 முதல் 80ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர்.

இவர்கள் முறையாக பேரூராட்சி விதிகளுக்கு உட்பட்டு வரி செலுத்தி வருகின்றனர்.

இதனிடையே அதிரை மக்கள் தொகைக்கு ஏற்றவாறு குடி நீர் வினியோகம் செய்ய பேரூராட்சியில் போதுமான ஆழ்துளை கிணறுகள் இருந்தும் நிலத்தடி நீர் குறைவாக உள்ளதால் நீரேற்றம் செய்வதில் கால தாமதம் மற்றும் பற்றாக்குறை நிகழ்கிறது.

இதனால் அத்தியாவசிய குடிநீர் தேவைக்கு தனியார் நிறுவன நீர்களை வாங்கி பருகும் அவல நிலைக்கு அதிரை மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

மறுபுறம் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பெறப்பட்ட நீரும் அங்குள்ள நீர் இருப்பு காரணமாக குறையத ்தொடங்கியதை அடுத்து இனி வரும் காலங்களில் குடிநீர் தேவை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

எனவே பொதுமக்களாகி நாம் செய்ய வேண்டியது என்ன?

குடிநீர் தேவைக்காக மட்டுமே தண்ணீரை உபயோகம் செய்யவும்.

இதர தேவைகளை வீட்டில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூலமே நிவர்த்தி செய்து மற்றவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டுகிறோம்.

மேலும் வீட்டில் உள்ள கழுநீர் வீட்டிலேயே பள்ளம் அமைத்து மறு சுழற்சிக்கு வாய்ப்பு அளிப்புபோம். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன் நீர்தட்டுபாடின்றி நிம்மதியாகவும் வாழலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...