57
திருவாரூரில் கலாம் நண்பர்கள் இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் முகாம் நடைபெற்றது.
சுற்றுச்சூழல் மாசுபாடு பெருகி வரும் இக்காலத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது நம் அனைவரின் தலையாய கடமையாக உள்ளது. மரங்களை அழித்ததால் ஏற்பட்டதன் விளைவு , இன்று மழையே இல்லாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம்.
இந்நிலையில் தான் நேற்று(01/07/2018) ஞாயிற்றுக்கிழமை திருவாரூரில் கலாம் நண்பர்கள் இயக்கத்தின் சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலாம் நண்பர்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் , ஒருங்கிணைப்பாளர்கள் , உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.