Monday, December 1, 2025

என்று தீருமோ கடற்கரைத் தெருவின் அவலம் ?

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையின் பிரதான தெருக்களில் கடற்கரைத் தெருவும் ஒன்று. அரசின் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி , அங்கன்வாடி நிலையம் , மதரஸா என சிறுகுழந்தைகள் அதிகமாக இருக்கும் இங்கு , சாக்கடை பிரச்சனை தலைவிரித்தாடுகிறது.

அதிரை பேரூராட்சி நிர்வாகத்திடம் கடற்கரைத் தெருவாசிகள் பல முறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல அதிரை பேரூராட்சி கண்டும் காணாமல் உள்ளது. இந்த சாக்கடை பிரச்சனை தொடர்பாக பட்டுக்கோட்டை தொகுதி எம்எல்ஏ திரு. C.V. சேகரையும் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனாலும் இது வரை அரசுத் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும் நிரம்பி வழிந்து ரோட்டில் ஆறு போல ஓடும் சாக்கடையால் அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கும் , பள்ளி குழந்தைகளுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கடற்கரைத் தெருவில் பொதுமக்களின் சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த சாக்கடை பிரச்சனையை தீர்க்க அதிரை பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ? அல்லது வழக்கம்போல் கண்டும் காணாமல் இருக்குமா ? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வீடியோ இணைப்பு:-

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img