தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பழஞ்செட்டித் தெருவை சேர்ந்தவர் அப்சர். இவர் அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய நண்பர் சுஹைல். இவரும் அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். அப்சர் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் தனது நண்பர் சுஹைலோடு இந்தியன் வங்கி ஏடி.எம்மில் பணம் செலுத்துவதற்காக சென்றுள்ளார். அங்கு சென்று ஏடிஎம்மில் பணம் டெபாசிட் செய்ய முயன்றுள்ளார். அப்போது அந்த ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வைக்கும் இடத்தில் ரூ.45 ஆயிரம் இருந்தது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த இருவரும் அந்த பணத்தை எடுத்து கொண்டு அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அதிரை பள்ளி மாணவர்களின் இந்த நேர்மைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த இரு மாணவர்களுக்கும் அதிரை எக்ஸ்பிரஸ் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!
அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)
அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...
அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!
நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில்
இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...





