கர்நாடகாவில் சர்க்கரை ஆலையில் கொதிகலன் வெடித்து எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர். 5 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள முத்ஹோல் என்ற பகுதியில் பாஜக எம்எல்ஏ முருகேஷ் மற்றும் அவர்களது சகோதரர்கள் இந்த ஆலையை நடத்தி வருகின்றனர்.நிரானி சுகர்ஸ் என்ற பெயர் கொண்ட ஆலையில் இன்று விடுமுறை என்ற போதிலும் தொழிலாளர்கள் வழக்கம் போல வேலை செய்து கொண்டிருந்தன்.








