Sunday, September 14, 2025

ஓடும் ரயிலில் எம்எல்ஏ-விடமே ரூ. 1 லட்சத்தை திருடிய கொள்ளையர்கள் !

spot_imgspot_imgspot_imgspot_img

சென்னை:ரயிலில் வந்த திமுக கொறடா சக்கரபாணியிடம் 1 லட்சம் ரூபாய், செல்போன் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரையிலிருந்து சென்னைக்கு பாண்டியன் விரைவு ரயிலில் ஒட்டன்சத்திரம் எம்எல்ஏவும், திமுக கொறடாவுமான சக்கரபாணி பயணித்தார். பயணத்தின் போது தன்னுடன் 1 லட்சம் ரூபாய், தங்க மோதிரம், செல்போன் ஆகியவற்றை அவர் வைத்திருந்தார்.

ரயிலில் சக்கரபாணி அசந்து தூங்கியிருக்கிறார். பின்னர் தூக்கம் கலைந்து எழுந்து அவர் பார்த்த போது அவர் வைத்திருந்த பை காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ந்தார்.

பையுடன் ஒரு லட்ச ரூபாய் பணம், தங்க மோதிரம் மற்றும் செல்போன் திருடப்பட்டது தெரிய வந்தது. தனது பணப்பை திருடு போனதை அறிந்து அங்குள்ள ரயில்வே காவல்துறையிடம் புகார் அளித்தார்.

இது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் வகுப்புப் பெட்டியில் பயணித்த எம்எல்ஏ சக்கரபாணியின் பொருட்கள் திருடுபோனது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img