நாடாளுமன்ற தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.அதிமுக,திமுக கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டன.இந்நிலையில் டிடிவி தினகரன் தலைமையில் செயல்படும் அமமுகவும் கூட்டணி குறித்து கலந்தாலோசித்து வருகிறது.
ஏற்கனவே 38 தொகுதிகளில் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தது.இந்நிலையில் தினகரன் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது எஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு இடம் தரப்படும் என்று அந்த கட்சி நிர்வாகிகள் உடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்றும் கூறினார்.மேலும் சில பொதுக்கூட்டங்களிலும் இதனை உறுதிப்படுத்தி உள்ளார்.
இந்த பேட்டிகள் எஸ்டிபிஐ கட்சியின் தலைமை இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.ஆனால் கூட்டணி உறுதியாகிவிட்டதாகவே நம்பத்தகுந்த வட்டாரங்கள் நமக்கு தெரிவிக்கின்றனர்.